Friday, December 29, 2006

2006 ஆம் ஆண்டின் தலை சிறந்த 10 பெண்கள்...

இந்த வார அவள் விகடனில் ஒரு கட்டுரை.... இந்த ஆண்டின் தலைசிறந்த 10 பெண்மணிகள் பட்டியலிட்டு எழுதி இருந்தனர். அரசியல் பெண்மணிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு சாதணையாளர்க்ள் என்று இல்லாமல் விதி வசத்தால் தங்கள் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்திருந்தாலும் அதை பெரும் பாதிப்பாக கருதாமல் எப்படி எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு வாழ்கின்றனர் என்பதை பற்றி இருந்தது. இவர்களை பற்றி முந்தைய இதழ்களில் பெரிய கட்டுரை வந்திருந்தாலும், வருட சிறப்பிதழ் என்பதால் summarize பண்ணி இருந்தார்கள்.

ஒவ்வொருவரையும் பற்றி படிக்கும் போது கண்கள் கலங்கி விட்டது. கணவர் படுக்கையில் விழுந்து 18 வருடங்க்ள் ஆகியும் அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு, அவர் உடல் நலம் சரியாகி விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழும் மனைவி, தாயும் தந்தையும் இல்லாமல் தங்கை மற்றும் தம்பியரை படிக்க வைத்து கொண்டு தானும் படிக்கும் சிறுமி, தன் பெண்ணுக்கு சரியான மூளை வளர்ச்சி சரி இல்லாமல் படுக்கையை விட்டு எழ முடியாமல் இருந்தாலும், பார்வை ஒன்றே போதும் என்ற எண்ணத்தோடு சைகை மொழியை கற்று கொடுத்து பத்தாவது பாஸ் செய்ய வைத்திருக்கும் தாய் என இவர்கள் செய்துள்ள சாதணைகள் தான் எத்தனை??

கால் ஊனமாக இருந்தாலும் படகோட்டி குடும்பத்தையே காப்பாற்றும் சிறு பெண், கை ஊனமுற்று இருந்தாலும் I.A.S ஆவதே லட்சியமாக கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கும் மங்கை, தினமமொரு உறுப்பு செயலிழந்து கொண்டு இருந்தாலும் (எழுதும் போதே கை மனம் பதறுகின்றது), உற்சாகம் இழக்காமல் பணி புரிந்து கொண்டு இருக்கும் பெண், கோவில் ஒதுவாராக ஒரு தாழ்த்த பட்ட பெண், தன் மகனுக்காக உயிரை பணயம் வைத்து கல்லீரலை தானமாக கொடுத்த ஒரு தாய், கோர விபத்தில் கை விரல்களை இழந்த பிறகும் நம்பிக்கை இழக்காமல் செயற்க்கை கைகளை கொண்டு பத்தாவது பரிட்சையும் எழுதி 1137 மதிப்பெண் எடுத்து சாதனை செய்துள்ள மாணவி, தான் கஷ்டத்தில் இருந்தாலும் தன் மகனை நாட்டில் உள்ள தலை சிறந்த கல்லூரியில் படிக்க வைத்து இருக்கும் ஒரு தாய் என இவர்கள் தாண்டி வந்திருக்கும் தடை கற்க்கள்தான் எத்தனை??

இவர்களை பார்க்கும் போது நம்முடைய மிக முக்கியமான பிரச்ச்னைகளான, மாமியார் சரியில்லை, நாத்தனார் பொறாமை பிடித்தவள், என் கணவருக்கு என் மேல் ப்ரியம் கிடையாது, என்னுடைய boss ஒரு முசுடு, எனக்கு உண்மையான நண்பர்கள் கிடையாது, என்னை யாருக்கும் பிடிக்காது, என்னை புரிந்து கொள்பவர்கள் யாருமே கிடையாது, போன்றவற்றை நினைப்பது கூட பாவம்.

வாழ்க்கையில் பிடிப்பு தளர்ந்து அடுத்து என்ன என்று தெரியாமல் இருப்போர், மற்றும் தீவிரமான comparison ல் மாட்டிக்கொண்டு தாழ்வு மனப்பான்மையால் கஷ்டபட்டுக் கொண்டு இருப்போருக்கு இந்த மாதிரி மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர் என்று தெரிந்து,தெளிந்து முன்னேற்ற பாதையை வகுத்துக் கொள்ளல் வேண்டும். இனி அற்ப விஷயங்களை நினைத்து பொன்னான நேரத்தை கவலைப்பட்டு வீணடிக்காமல் இருக்கும் இந்த வாழ்க்கையை எப்படி பிரயோஜனமாக செலவழிக்கலாம் என்று எண்ணி செயல் படுவோமாக.

அவள் விகடனிலிருந்து scan செய்த பக்கங்கள் - சாதனை பெண்களின் photo மற்றும் விவரங்களுடன்.





ஜெயா.

2 comments:

Shruthi said...

இவர்கள் அனைவருக்கும் என் வணக்கத்துக்குரிய வாழ்த்துக்கள்

ஜெயா said...

வருகைக்கு நன்றி ஷ்ருதி.