Thursday, December 21, 2006

சங்கீதமும் நானும்....

பிறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமத்தில் என்பதால், சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டிய நிலமை... எதோ காதில் விழுகின்ற சினிமா பாடல்களை முனுமுனுப்பதோடு போய்கொண்டு இருந்த வாழ்க்கை இந்த சென்னை மாநகரத்திற்க்கு வந்த பிறகு "அடடா வாழ்க்கையில சங்கிதம் கத்துக்காம போயிட்டோமே" என்பது ஒரு பெரிய குறையா போச்சு.

எங்க அம்மா கிட்டே ஒரே குறை பாடிக்கிட்டு இருந்தேன்... "சே ஒரு வருங்கால சித்ரா, பாம்பே ஜெய ஸ்ரீ இந்த உலகம் இழந்துடுச்சுமா உன்னால" என்று... எங்கம்மா ஒரு முறை முறைச்சுட்டு "பொறக்கும் போதே தெரியுமாம் காக்கையும் குயிலும்" என்று நக்கலா சொல்லிட்டு வேலையை பார்த்துகிட்டு போய்ட்டாங்க.

அதுக்குள்ள எனக்கும் பாட்டு கத்துக்கற வயசு தாண்டிடுச்சு என்று (பாடி கழுதை வந்துடுச்சுன்னா என்ன பண்றது என்ற பயமும் வந்துடுச்சு) நம்மால முடிஞ்ச எதாவது இசை உலகத்துக்கு பண்ணனும் என்ற் ஆர்வத்திலயும், ரொம்ப ஆராய்ச்சி பண்ணி, வீணை கத்துக்கலாம் என்று முடிவு செய்தோம்.(இதுல எங்க்காவும் சேர்த்தி.)

சைக்கிள் எடுத்துகிட்டு, டி.நகர் full-a சுத்தி சரோஜனி தெரு ல ஒரு மாமி வீணை சொல்லிக்கொடுக்கறதை கண்டு பிடிச்சு போய் பார்ததோம். தானே கத்துக்க ஆர்வத்தில வந்த எங்களை பார்த்து பயங்கர impress ஆகி கத்து குடுத்தாங்க...

கொஞ்ச நாள் கழிச்சு, வீட்டிலேயே practise பண்ண ஒரு வீணையும் வாங்கினோம். அதுல இருந்து எங்க வீட்டுக்கு guest வரதே குறைஞ்சு போச்சு என்று ரொம்ப நாள் கழிச்சுதான் கண்டு பிடிச்சோம். அப்போ தான் டி.வி. ல வேற "உடல் பொருள் ஆனந்தி" என்று ஒரு திகில் தொடர் ஒன்று போட்டுகிட்டு இருந்தான். அதுல வர heroine நிறைய மல்லிகை பூ வைச்சு கிட்டு வீணை வாசிப்பாள். அதை பார்த்து வேற எஙக மக்கள் டென்ஷன் ஆகிட்டு இருந்தாங்க...

இப்படி இரண்டு வருஷம் ஒட, நானும் கீர்த்தனைகள் வரைக்கும் கத்துக்கிட்டேன். அப்புறம் வேலை, மற்ற விஷயங்களில் busy ஆகிட வீணை பின்னாடி போயிடுச்சு....

எனக்கு வீட்டுகாரரா வந்தவரோ, சங்கீதம் என்றால், பக்கத்து வீட்டு பொண்ணு பேரா என்று கேட்டுக்கும் அளவிற்க்கு சங்கீத சூனியம். கச்சேரிக்கு போகலாம் என்றால், சொல்கின்ற் இடத்திலேயே குறட்டை விடுவார். இந்த கச்சேரி சீசனிலியாவது ஒரு கச்சேரி போய் ரசித்து கேட்கனும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். யார் ஜெயிக்கிறோம் என்று பார்ப்போம்.

ஆனாலும் இந்த பாட்டு பாடற்வ்ங்களை பார்த்தா பயங்கர பொறாமையா இருக்கும். இவங்க தொண்டைல மட்டும் கடவுள் என்ன வைச்சு இருக்கார்? கை போகிற இடமெல்லாம் குரல் போகுதே என்று... அடுத்த ஜென்மம் என்று ஒன்னு இருந்தா அதிலெயாவது ஒரு பாடகியா பிறந்து பிரமாதமா பாடணும் என்ற ஆசை தீருமா என்று பார்க்கனும்....

ஜெயா.

1 comment:

sugan said...

Naama indha weekend nichayamagha oru kutchery porom. Edhu andha sudala mada sami-mela satyam