Tuesday, February 6, 2007

கல்யாணமாம் கல்யாணம்...

போன வாரம் சொந்தகார பெண் ஒருவரின் கல்யாணத்திற்க்காக கும்பகோணம் சென்றோம். கல்யாணம், ஒரு கிராமத்தில் என்பதால், சத்திரம் முதல் சாப்பாடு வரை கிராமிய மணம், வசதிகள் குறைவு, மக்கள் கூட்டமோ அதிகம். அதில் வேறு கல்யாண மாப்பிள்ளையின் வேண்டுதலுக்காக தாலி கட்டும் வைபவம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோவிலில் வைப்பதாக முடிவு. ஆகவே தாலி கட்டுவதற்க்கு முன் செய்கின்ற சாங்கியம் அனைத்தும் சத்திரத்தில் செய்து முடித்ததும், எற்ப்பாடு செய்திருந்த வேன் மூலம் மணப்பெண், மாப்பிள்ளை மற்றும் முக்கிய உறவினர்கள் இரண்டு ட்ரிப்பாக கல்யாண மண்டபத்திலிருந்து கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். நானும் என் கணவரும் வேனிலிருந்து தப்பித்து மற்றொரு உறவினரின் வண்டியில் ஏறி கோவிலுக்கு சென்றோம்.

அங்கே மாப்பிள்ளையும் பெண்ணும் தயாராக இருக்க, ஐயர் தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க, மாப்பிள்ளையும் கெட்டி மேளம் முழங்க கட்டினார். அடுத்த நிமிடம் முன்னாடி நின்று இருந்த பாட்டி ஒருவர், தாலியை பிரட்டி கட்டிடாங்க, அப்படி கட்டவே கூடாது, என்று பிரச்சனை எழுப்ப, அருகில் இருந்த பலர் ஆமோதிக்க, சந்தோழ சூழல் மாறி, பதட்டம் குடிகொண்டது. கழற்றி கட்ட வேண்டும என்று ஒரு தரப்பும், கட்டின தாலியை கழட்டலாமோ என்று இன்னோரு தரப்பும் கருத்துக்களை அள்ளி வீச ஆரம்பிக்க, மாப்பிள்ளைக்கு வியர்க்க ஆரம்பித்தது. தவறுதலாக தாலியை கொடுத்த ஐயருக்கும் நல்ல திட்டு.

கடைசியில் கழற்றி கட்ட வேண்டும் என்ற கட்சி ஜெயிக்க, மாப்பிள்ளை கட்டிய தாலியை கழற்ற ஆரம்பித்தார்... கிடைத்தடா வாய்ப்பு என்ற எண்ணத்தில் கெட்டியாக போட்ட முடிச்சுகள் அவிழ்வேனா என்று முரண்டு பிடிக்க, மாப்பிள்ளை கழற்றியே தீர்வேன் என்று அடம் பிடிக்க, உச்ச கட்ட கிளைமேக்ஸ் ற்க்கு பிறகு, மாப்பிள்ளை திரும்ப கட்டினார். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், மணமக்களின் மனநிலை கண்டிப்பாக பாதிக்கப்பட்டுதான் இருக்கும், அதிலும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பின் கேட்கவே வேண்டாம்.

ஆனால் கல்யாணம் என்பதே சுவையான, அன்பான, அதிர்ச்சிகரமான, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தல்லவா, அந்த பயணம் ஆரம்பிக்கும் நாளிலேயே தன் முகங்களை காண்பிக்க ஆரம்பித்தால் யாரால் என்ன செய்ய முடியும், அதன் போக்கிலேயே போவதை தவிர....

ஜெயா.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. சோகம் தான்:(( பாவம் மணமக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறு மொழி மட்டுறுத்தல்(comment moderation) செய்து விடுங்கள் சீக்கிரமே.அது தான் நல்லது.

ஜெயா said...

வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி முத்துலட்சுமி. செய்து விடுகிறேன்.

ஜெயா.